tamilnadu

img

பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

செய்யூர், செப்.9- காஞ்சிபுரம் மாவட்டம்,   கிழக்கு கடற்கரைச் சாலை  யில் நல்லூர், கரும்பாக்கம், கடுக்கலூர், மரக்காணம் ஓடை, வெடால், சூனாம்பேடு அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் பிரதான சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு முதல் சாலை யைச் சீரமைக்க வேண்டும் என  வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  பேரூராட்சி அலுவல கம்  முன்பு  ஆர்ப்பாட்டம், கஞ்சிகாய்ச்சி குடிக்கும் போராட்டம், காத்திருக்கும்  போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடத்த ப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சாலையை மேம்படுத்த ரூபாய் ஒரு கோடி வரை மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கியது. பின்னர், பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஒப்பந்தம் விடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை அதிமுக-வை சேர்ந்த சேகர் என்பவருக்கு கிடைக்காததால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை ஆணை பெற்றுள்ளார். இதனால் கடந்த ஒரு வருடமாக சாலை பணிகள் துவங்க முடியாமல் உள்ளது. இப்பிரச்சனைக்கு பேரு ராட்சி  நிர்வாகமும் உடந்தையாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில், போருராட்சி நிர்வாகம் சாலை அமைப்பதற்கான  பணியை உடனடியாக துவங்க வேண்டும் என வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியு டன், நல்லூர் கிராம மக்கள் இணைந்து பேரூராட்சி அலுவலகம் முன்பு திங்களன்று (செப் .9) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.  திமுக  செயாலாளர் எஸ்.இனியரசு, சிபிஎம் செய்யூர் வட்டச் செயலா ளர் எஸ்.ரவி, வட்டக்குழு உறுப்பி னர்கள் கோவிந்தசாமி, வெள்ளி க்கண்ணு, வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.புருசோத்த மன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வாசுதேவன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். இதுகுறித்து சிபிஎம் செய்யூர் வட்டச் செயலாளர் எஸ்.ரவி கூறுகையில் ‘ சிபிஎம் தொடர்ந்து போராட்டம் நடத்தியதன்  விளை வாக மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கியுள்ளது.  பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல் ஆளும் கட்சியினருடன் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து கொண்டு சாலைப் பணிகளை துவங்காமல் இருக்கிறார்கள்.  எனவே சாலை அமைக்கும் பணியை உடனே துவங்க வில்லை என்றால் நல்லூர் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றார்.