காஞ்சிபுரம் ஓரிக்கை ராஜன் நகர் பகுதியில் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. கிளைச் செயலாளர் எஸ்.அறிவழகன் தலைமை தாங்கினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்டத் தலைவர் மா.பா.நந்தன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். நகரத் தலைவர் இ.சங்கர், நகரச் செயலாளர் கே.யுவராஜ், வி.சீனிவாசன், எஸ். ஹரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.