கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்த தீக்கதிர் காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர் இராமநாதனின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ராமநாதனின் மனைவியிடம் ரூபாய் 5 லட்சத்துக்கான காசோலையை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மன்னார் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.