tamilnadu

img

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் காஞ்சிபுரத்தில் வியாழனன்று (அக்.10)  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் டி.ஸ்ரீதர், சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், பொருளாளர் வசந்தா,  நிர்வாகிகள் படவேட்டான், கேசவன், பாபு, மதியழகன் ஆறுமுகம்,   உட்பட பலர் கலந்து கொண்டனர்.