பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்திட வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடைபயண இயக்கத்தில் கலந்து கொண்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான பாராட்டு கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செங்கல்பட்டில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் வா.பிரமிளா தலைமை தாங்கினார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி நினைவுப் பரிசு வழங்கினார். மாவட்டச் செயலாளர், இ.சங்கர், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன், வாலண்டினா உட்பட பலர் கலந்து கொண்டனர்.