1982 ல் அகில இந்திய அளவில் நடைப்பெற்ற முதல் பொது வேலை நிறுத்தத்தின்போது துப்பாக்கி சூட்டில் பலியான தஞ்சை தியாகிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.19)காஞ்சிபுரத்தில் அனுசரிக்கப்பட்டது. கைத்தறி சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கைத்தறி சங்க மாவட்டச் செயலாளர் கே.ஜீவா தலைமை வகித்தார். தியாகிகள் நினைவு தின கொடியினை ஏற்றி வைத்து ஏ.வாசுதேவன் உரையாற்றி னார். இந்நிகழ்ச்சியில், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் கே.நேரு, வட்டச் செயலாளர் இ.லாரன்ஸ், முறை சாராத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பி.சிவகுமார், எஸ்.புவனேஸ்வரி மற்றும் கைத்தறி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.