கள்ளக்குறிச்சி, மே 23-கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி கள்ளக்குறிச்சியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 23 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகியிருந்த வாக்குகள் ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு எண் ணிக்கை என்பது அறிவிக்கப்பட்டு வந்தது. இதில் துவக்கத்திலிருந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான பொன்.கவுதமசிகாமணி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். மூன்று லட்சத்திற்கும் மேல் வாக்குகள் வித்தியாசத்தில் பொன் கவுதம சிகாமணி முன்னிலை பெற்றிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்தின் மைத்துனரான எல்.கே. சுதீஷ் தொடர்ந்து இத்தொகுதியில் இரண்டாவது முறையாக தோல்வியடைகிறார். டாக்டர் பொன் கவுதம சிகாமணி வெற்றியை பொறியியல் கல்லூரி முன்பு குடியிருந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தொண்டர் களும் பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். வேட்பாளரின் தந்தையான சட்டமன்ற உறுப்பினர் பொன் முடி அங்கே இருந்த பொது மக்கள் அனைவருக்கும் வாக்களித்தமைக்கும் நன்றி தெரிவித்து வணங்கினார்.