tamilnadu

img

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்களிடம் மின்வாரிய நிர்வாகம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதித் தொகையில் முன்பணம் கேட்கும்போது அவர்களுக்கு உடனடியாக முன்பணம் வழங்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் தலைவர் கே.விஜயகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.சீனுவாசன், பொருளாளர் எஸ்.வெங்கடேசன், சலீம், ஏழுமலை, இ.காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.