கள்ளக்குறிச்சி, மார்ச் 2- கள்ளக்குறிச்சியில் உள்ள ஜே.எஸ்., குளோ பல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் இயற்கை மற்றும் அறிவியல் வழியில் முதலா வது ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு நிறு வனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தாளாளர் ஜனனி செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஜெயலஷ்மி ஆண்டறிக்கையினை வாசித்தார். ஒருங்கி ணைப்பாளர் சுதாரமேஷ் வரவேற்றார். சரவணன், பொய்யாமொழி நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். ஆனந்த்அமிர்தராஜ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். “சுற்றுச்சூழல் பாதுகாப்போம் விவ சாயம் காப்போம்” என்ற தலைப்பில் நடந்த பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மற்ற பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா பரிசுகளை வழங்கினார். சென்னை எல்.எம்.இ.எஸ்., அகாடமி நிறுவனர் பிரேம்ஆனந்த் குழுவினர் மாண வர்களுக்கு அறிவியல் நுணுக்கங்களை எளிமையாக விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி நீதிபதி லதா, சென்னை ஜே.எஸ்., பள்ளி முதல்வர் ஸ்ரீதேவி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாண வர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜீவிதா நன்றி கூறினார்.