கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு காதொலி கருவி பொருத்தப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து 470 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, வருவாய் அலுவலர் சங்கீதா, துணை ஆட்சியர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.