tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கொரோனா நோய் தொற்று காலத்தில் நுண் நிதி நிறுவனங்கள் மாதத் தவணையை கட்டாயப்படுத்தி வசூலிப்பதைக் கண்டித்தும், ஜனவரி மாதம் வரை மாதத் தவணை வசூலிப்பதை நிறுத்தி வைக்கக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில்  திருக்கோவிலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இ.அலமேலு, மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.லூயிசாமேரி, வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் வி.மார்த்தாண்டன், துணை செயலாளர் மு.சிவக்குமார், வட்டச் செயலாளர் கே.ஹரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் வட்டாட்சியரிடம் 250க்கும் மேற்பட்ட மனுக்கள் வழங்கப்பட்டன.

;