கள்ளக்குறிச்சி. செப். 17- கள்ளக்குறிச்சி நகராட்சியில் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்த குடிநீர் கிணற்றை தூர் வாரக் கோரியும், குடிநீர் பிரச்சனையை தீர்க்கக் கோரியும் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி நகராட்சியில் 17,18,19 ஆகிய வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் பிரச்ச னையை தீர்த்திட சுமார் பத்தாண்டு களாக குடிநீர் கிணறு ஒன்று பயன்ப டுத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து நீர் சுரந்தாலும் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தாலும், தூர்வாராததா லும் தற்போது தண்ணீர் வற்றி மண் மேடாக காட்சியளிக்கிறது. இதனால் தொடர்ச்சியாக பல மாதங்களாக குடிநீர் பிரச்சனையால் இம்மூன்று வார்டு பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். கடந்த சில தினங்களாக மிகக் கடு மையான முறையில் குடிநீர் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டதால் செவ்வாயன்று (செப்.17) காலையில் இம்மூன்று வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவல கத்தை முற்றுகையிட்டு குடிநீர் பிரச்ச னையை தீர்த்திட கிணற்றை தூர்வாரி தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என கோரிக்கை முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த நகராட்சி ஆணை யர் அறையிலிருந்து வெளியே வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தொடர்ந்து நக ராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படுவதாகக் கூறி ஆண்களும், பெண்களும் நகராட்சி ஆணையரை யும் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதன்பின் பிரச்சனையை தீர்ப்பதாக நகராட்சி ஆணையரும், அதிகாரிகளும் உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.