கள்ளக்குறிச்சி, ஆக. 29- விவசாயிகளுக்கான கவுரவ ஊக்கத்தொகை திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புகார் மற்றும் போராட்ட நட வடிக்கைகளின் விளைவாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய துறைகளின் சார்பில் சைபர் கிரை மில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மே 14, ஜூலை 18, 22, 24, 30 என 5 முறை கள்ளக்குறிச்சி வேளாண் இணை இயக்குனருக்கும், அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 3ஆவது வாரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடமும் கட்சியின் சார்பில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப் பட்டது. மேலும் ஆகஸ்ட் 17ஆம் தேதி மாவட் டம் முழுவதும் ஒன்பது இடங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. அதன் விளைவாக 2 உதவி வேளாண் இயக்குநர்கள் உள்ளிட்ட சில அதிகாரிகள் பணியிடை நீக்கம், தனியார் நிறுவனங்கள் சார்பில் இப்பணியை மேற்கொள்ள நிய மிக்கப்பட்டிருந்த சுமார் 18 ஊழியர்கள் உள் ளிட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சங்கராபுரத்தில் அனுஷ்கா, மண லூர்பேட்டையில் பத்மஸ்ரீ, ஜெ.வி நெட் உள்ளிட்ட பல இன்டர்நெட் சேவை கணினி மையங்கள் வட்டாட்சியர்களால் சீல் வைக்கப்பட்டன. மேலும் விவசாயிகள் அல்லாதோர் அனை வரையும் கண்டறிந்து அவர்களிடமிருந்து பணத்தை திரும்ப அரசின் வங்கி கணக்கிற்கு மாற்றுவதற்கும், முறைகேடுகளில் ஈடு பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்திடவும் மாவட்ட வேளாண் இயக்கு னர்கள் மூலம் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதில் தொடர்புடைய உயர் அதி காரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென கட்சியின் மாவட்ட செயலாளர் டி.ஏழுமலை கோரிக்கை விடுத்துள்ளார்.