தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 16ஆவது மாநில மாநாட்டையொட்டி தோழர் டி.ஜானகிராமன் நினைவு கொடி பயண வரவேற்பு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் கோட்டச் செயலாளர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர்கள் டி.பழனிவேல், கே.காங்கேயன், துணைத் தலைவர் கே.அம்பிகாபதி, சிஐடியு விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவர் கே.விஜயகுமார், செயலாளர் எம்.செந்தில், பொருளாளர் ஏ.வீராசாமி, சர்க்கரை சம்மேளன மாநிலச் செயலாளர் வி.உதயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.