tamilnadu

img

நான்காம் வகுப்பு மாணவியிடம் பாலியல் வன்முறை பாஜக தலைவர் கைது

கண்ணூர்
கேரள மாநிலம் பானூர் அருகில் உள்ள  ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

கண்ணூர் மாவட்டம் திரிபங்கோட்டூர் பஞ்சாயத்து பாஜக தலைவர் பத்மராஜன் (45). ஆசிரியரான இவர் பாஜக சார்பு அமைப்பான என்டியு மாவட்ட நிர்வாகியாகவும் உள்ளார். இவர் வேலை செய்யும் அரசுப்பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவியை கழிப்பறையில் வைத்து பாலியல் வன்முறை செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவி புகார் தெரிவித்தார். விசாரணையில் வேறு சில மாணவிகளிடமும் இதுபோல் நடந்து கொண்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போச்சோ சட்டத்தின் கீழ் இவர் மீது பானூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்து வந்தார்.

விடுமுறை நாட்களில் மாணவியை பள்ளிக்கு வருமாறு அழைத்து பலமுறை பாலியல் வன்முறை செய்துள்ளார். வெளியில் சொன்னால் சிறுமியையும் தாயாரையும் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். தகப்பன் இல்லாத சிறுமி அச்சத்தால் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி வீட்டில் இருந்ததால் இந்த விவரம் வெளி உலகுக்கு தெரியவந்தது. கடந்த மாதம் 16ஆம் தேதி தலச்சேரி டிஒய்எஸ்பி அலுவலகத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர். மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளானது உறுதி செய்யப்பட்டது. நீதிமன்ற நடுவரிடமும் சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்களும், சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர். புதனன்று மதியம் பானூர் அருகில் உள்ள விளக்கோட்டூர் ஆர்எஸ்எஸ் முகாமிலிருந்து பத்மராஜன் கைது செய்யப்பட்டார்.

;