tamilnadu

img

ரூ.15 லட்சம் தருவதாக சொல்லவே இல்லை... சத்தியம் செய்யும் கல்ராஜ் மிஸ்ரா

சண்டிகர், ஏப். 8 -

குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ. 15 லட்சம் போடுவோம் என்று ஒருபோதும் பாஜக வாக்குறுதி அளித்ததில்லை என்று மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறியுள்ளார். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள்தான் பொதுமக்களிடம் பொய்ப்பிரச்சாரம் செய்து வருவதாகவும் குறைப்பட்டுள்ளார்.“வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம், இந்தியா கொண்டுவரப்பட்டால் ஒவ்வொரு இந்தியக் குடிமக்களின் வங்கிக்கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடத்தக்க அளவிற்கு இருக்கும் என்றுதான் பொதுக்கூட்டங்களில் பாஜக தலைவர் தெரிவித்தார். ஆனால், எங்கள் தேர்தல் அறிக்கையில் அவ்வாறு கூறவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.” என்றும் கல்ராஜ் சமாளித்துள்ளார்.பாஜக-வுக்காக கல்ராஜ் மிஸ்ரா, என்னதான் வரிந்து கட்டினாலும், அவருக்கு இந்த முறை எம்.பி. சீட் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

;