tamilnadu

img

கர்நாடகா: துணை முதல்வருக்கு கொரோனா

கர்நாடக துணைமுதல்வருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா அமைச்சரவையில் அஷ்வத் நாராயண் துணை முதல்வராக உள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அஷ்வத் நாராயண்  தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக சட்டசபை கூட உள்ள நிலையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதில் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் இல்லை. வீட்டில் என்னை தனிமைப்படுத்தி உள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.