tamilnadu

img

படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து - தாய் குழந்தை பரிதாப பலி

பெங்களூரு, 

கர்நாடகாவில் வரலட்சுமி சரத்குமார் நடித்துவரும் வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து நடைபெற்றது. படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த தாயும் அவரது 8 வயது மகளும் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அர்ஜுனின் உறவினர் சிரஞ்சீவி சார்ஜா நடித்து வரும் கன்னட சினிமாவின் படப்பிடிப்பு பெங்களூரு அருகேவுள்ள பாகலூரு என்ற இடத்தில் நடைபெற்று வந்தது. அங்குள்ள ஷெல் கேஸ் கம்பெனி அருகே நடைபெற்று வந்த படப்பிடிப்பின் போது சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. அப்போது காரை வெடிக்க வைக்கும் காட்சி எடுக்கப்பட்ட போது எதிர்பாராத விதமாக தீ உருவாக்க வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்தது சிதறியது. 


இந்த விபத்தில் படப்பிடிப்பை பார்க்க வந்த சுமைரா என்ற பெண்ணும் அவருடைய 8 வயது பெண் குழந்தையும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.  


;