tamilnadu

img

ஹரியானாவில் லேசான நிலநடுக்கம்...

சண்டிகர்
கொரோனா பதற்றத்துக்கு இடையே நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு ஒடிஷா மற்றும் வடகிழக்கு மாநிலமான மிசோரம் பகுதிகளில் மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் லேசான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 

இந்நிலையில் நாட்டின் வடபகுதி மாநிலமான ஹரியானாவின் ரோக்தக் நகர் பகுதியில் இன்று மதியம் 12.58 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவாகியதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சில கட்டிடங்கள் விரிசல் ஏற்பட்டன. மற்றபடி உயிரிழப்பு பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. 

;