tamilnadu

img

கொரோனா வைரஸ் தாக்குதல்... ஆந்திர உள்ளாட்சித் தேர்தல்கள் ஒத்திவைப்பு

அமராவதி
உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் எனும் புதிய ஆட்கொல்லி வைரஸ் இந்தியாவிலும் தனது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.

107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ள நிலையில், கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஆந்திர மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

நகராட்சிகள் மற்றும் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு மார்ச் 21-ஆம் தேதியும் புறநகர்ப் பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு மார்ச் 23-ஆம் தேதியும் தேர்தல்கள் நடைபெறுவதாக இருந்த நிலையில், 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அம்மாநில தேர்தல் ஆணையர் ரமேஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.
 

;