கரூர்: கரூரை அடுத்த மாயனூர் புதுதெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் ராகுல்(20). இவரது நண்பர் ஹரிராம்(18). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் மாயனூரில் இருந்து ருகில் உள்ள முனையனுருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு திருப்பத்தில் எதிரில் வந்த தனியார் பேருந்து மோதிய விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ராகுல் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். உடன் சென்ற ஹரிரா முவுக்கு எழும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள் ளார். இச்சம்பவம் குறித்து மாயனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.