tamilnadu

img

கரூரில் பொங்கல் விளையாட்டு விழா

கரூர், ஜன.19-  கரூர் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் விளையாட்டுப் போட்டி கள், சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கபாடி, சைக்கிள் போட்டி, பானை உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளை யாட்டு போட்டிகள் நடத்தப்பட் டன. கரூர் நகர குழுவிற்கு உட் பட்ட கோடாங்கிபட்டி கிளை யில் 31 ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா நடைபெற் றது. விழாவிற்கு விழாக்குழு தலைவர் ஆர்.முருகன் தலை மை வகித்தார். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.ராஜா போட்டிகளை துவக்கி வைத் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.தண்ட பாணி, ஆர்.ஹோச்சுமின் ஆகி யோர் வெற்றி பெற்ற வீரர் களுக்கு பரிசுகளை வழங்கி னர். சங்க நிர்வாகிகள் கார்த்திக், தினேஷ், நவீன், மாதவன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரவக்குறிச்சி ஒன்றியம்
அரவக்குறிச்சி ஒன்றியம், கொத்தப்பாளையம் வாலிபர் சங்க கிளை சார்பில் பொங்கல் விளையாட்டு விழா கொத்த பாளையத்தில் நடைபெற்றது. கிளை நிர்வாகி பூபதி தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளி கள் சங்க மாவட்டச் செயலா ளர் கே.வி.கணேசன் விளை யாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து பேசினார். சிஐடியு சங்க மாவட்ட செய லாளர் சி.முருகேசன், கட்டு மான சங்க மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராஜா முகமது, அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர் வாகி கே.செல்லமுத்து, ஆட்டோ ஊழியர் சங்க ஒன் றிய தலைவர் எம்.ஆறு முகம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ராஜா, ஒன்றிய தலைவர் கே.நிசார்அலி ஆகி யோர் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகளை வழங்கி னர். இதில் நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.

;