கரூர் புத்தக திருவிழா மாணவ, மாணவிகளுக்கு பரிசு
கரூர், ஜூலை 21- கரூர் புத்தக திருவிழா, கரூர்- கோவை ரோட்டில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. வரும் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ள புத்தக திருவிழாவை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம், பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்துகிறது. புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு அரசு மற்றும் தனி யார் பள்ளிகளுக்கு 2 மாதங்களுக்கு முன்பே புத்தகம் சேமிப்பு உண்டியல் கொடுக்கப்பட்டு அதில் சேமிக்கும் தொகைக்கு 15 சதவீதம் கழிவு விலையில் புத்தகங்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவி களுக்கு திறனறிதல் தேர்வு நடத்தப்பட்டது. இதில் பங்கு பெற்ற சுமார் 30 ஆயிரம் மாணவ- மாணவி களுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் போட்டியில் கலந்து கொண்ட வர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகளை வழங்கினார். விழாக் குழுவின் கெளரவ தலைவர் ப.தங்கராசு, தலைவர் தீபம்சங்கர், செயலாளர் ஐ.ஜான்பாஷா, இணைச் செய லாளர் காமராஜ், பொருளாளர் சுப்ரமணியன் மற்றும் அமைப் பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் புத்தக திருவிழாவில் ஒவ்வொரு நாளும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 10 மாணவர்களுக்கு ரூ500 வீதமும், கலை நிகழ்ச்சியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு 5000 மதிப்பிலான புத்தகங்களும் பரிசளிக்கப்படுகிறது. இந்தாண்டு சிறப்பம்சமாக கோளரங்கம் மற்றும் சுமார் 60 அரங்குகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்ப னைக்கு வைக்கப்பட்டுள்ளன. தினமும் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சி, சிறந்த பேச்சாளர்கள் கலந்து கொண்டு விழா வை சிறப்பிக்கின்றனர்.
இந்தி மொழியை திணிப்பது மாநில கொள்கைக்கு எதிரானது திருச்சியில் பாரிவேந்தர் எம்.பி. பேட்டி
திருச்சிராப்பள்ளி, ஜூலை 21- இந்தி மொழியை திணிப்பது என்பது மாநில கொள்கைக்கு எதிரானது என திருச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் பாரி வேந்தர் கூறினார். இதுகுறித்து பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பி னர் பாரிவேந்தர், திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்தி மொழித் திணிப்பை மத்திய அரசு, மாநிலங்களின் மீது திணிப்பது என்பது மாநில கொள்கைகளுக்கு எதிரா னது. புதிய கல்விக் கொள்கை தமிழக மக்களுக்கு ஏற்றதாக இல்லை என்பதே தமிழக மக்களின் கருத்து என்பதால் அதை நான் மறுத்து பேச விரும்பவில்லை. மக்கள், புதிய கல்விக் கொள்கையை விரும்பவில்லை என்பதே உண்மை. பெரம்பலூர் தொகுதி, விவசாயிகள் நிறைந்த தொகுதி என்பதால் அவர்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்யும் வரை அதனை பாதுகாத்து வைப்பதற்கு உரிய குளிர்பதன கிடங்குகள் அமைத்து தருவதற்கு நாடாளு மன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்கு சொந்த செலவில் தண்ணீர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகித்து வருகிறேன். மேலும் முசிறியில் போர்வெல் அமைத்து மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்றார். முன்னதாக பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகி கள் கூட்டம் நிறுவனத் தலைவரும், பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் தலைமையில் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.