tamilnadu

கரூர், புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

தொழிற்பயிற்சி வழங்க திட்டம் இளைஞர்களுக்கு அழைப்பு
கரூர், செப்.25-தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் மூலம் தொழில்பழகுநர் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) இணைந்து இளைஞர்களுக்கு ஒரு வருட தொழிற்பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் நபர்கள் இயந்திரவியல் மற்றும் தானியங்கிவியல் அல்லது இயந்திர வியல் படிப்பில் பொறியியல் அல்லது பட்டயப்படிப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும். 2017, 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களி டமிருந்து ஒரு வருட தொழிற்பயிற்சிக்காக தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக வரவேற்கப்படுகின்றன.  மேலும் விபரங்களுக்கு இணையதளம் www.boat-srp. com என்ற பக்கத்தில் News and Events Column என்ற லிங்கைப் பார்க்கவும். இணையதளம் மூலமாக விண்ணப் பிக்க கடைசிநாள் 21.10.2019. தகுதியுள்ள நபர்கள் இந்த அரிய வாய்ப்பை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டல மேலாண் இயக்குநர் ஆர்.பொன்முடி தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி
பொன்னமராவதி, செப்.25- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த திருக்களம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டு றவு வங்கியில் விவசாயக் குழுக்கள் மற்றும் மாற்றுத்திற னாளிகளுக்கான கடன் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.  சங்க தலைவர் செ.ராஜமாணிக்கம் தலைமையேற்று கடனுதவிகளை வழங்கினார். சரக மேற்பார்வையாளர் சிதம்பரம், களஅலுவலர் சோமசுந்தரம், சங்கச் செய லாளர் துரையரசன், கூட்டுறவு சங்க இயக்குநர்கள் நெ. ராமச்சந்திரன், மு.சண்முகவேல், ராம.கருப்பையா ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு கறவை மாட்டுக்கடனாக ரூ.250000, விவசாயக் கூட்டுப் பொறுப்புக் குழுக் கடனாக மூன்று குழுக்களுக்கு ரூ.564000 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கரு.ஆறுமுகம், சங்கப் பணியாளர்கள் செல்வராஜ், பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இலவச கண் சிகிச்சை முகாம்
பொன்னமராவதி, செப்.25-புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மேலத்தானியம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பொன்னமராவதி சைன் லயன்ஸ் சங்கம், புதுக்கோட்டை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து பொது மக்க ளுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின. முகாமிற்கு சங்கத் தலைவர் சோலையப்பன் தலைமை வகித்தார். பொதுமக்கள் 179 பேருக்கு கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்கப் பட்டது. மேல்சிகிச்சைக்காக 30 நபர்களைத் தேர்வு செய்து மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சங்கச் செயலாளர் சக்திவேல் வரவேற்புரையாற்றினார். மண்டல தலைவர் மாணிக்கவேல் முகாமை துவக்கி வைத்தார். லயன்ஸ் சங்க தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் வேந்தன்பட்டி செயின்ட் ஜோசப் பள்ளி மாண வர்கள் தன்னார்வ தொண்டு செய்தனர். சங்கப் பொருளாளர் மனமுவந்தராஜா நன்றி கூறினார்.