கரூர், செப்.17- 25-ஆண்டுகளாக நல்ல தண்ணீர் வராமல் இருந்த நிலையை மாற்றும் வகையில் தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் திருப் பூர் மாவட்டம் முத்தூர் அணையிலி ருந்து கரூர் மாவட்டத்தின் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வருவ தற்கான பணிகள் தொடர விவசாயி களின் ஆதரவோடு நீதிமன்றத்தில் உத் தரவு பெறப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் கூறினார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் முத் தூர் தடுப்பணையில் ஆய்வுகள் மேற் கொண்டார். ஆய்வின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மறைந்த தமிழக முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டம்தான் முத்தூர் அணை திட்டம். இந்த அணையில் இருந்து விடுவிக் கப்படும் தண்ணீர் நொய்யல் ஆற்றின் வழியாக வந்து கரூர் மாவட்டத்தின் அர வக்குறிச்சி மற்றும் கரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 19 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமைக் கப்பட்டது. இந்த அணை அமைக்கப்பட்ட பிறகு மூன்றாண்டுகள் மட்டுமே தண் ணீர் வந்து சேர்ந்தது .பின்னர் திருப்பூர் சாயக் கழிவுகளால் இதில் தண்ணீர் வருவதற்கான தடை ஆணையை விவ சாயிகள் நீதிமன்றத்தில் பெற்றார்கள் .இதனால் இந்த நீராதாரத்தை நம்பி இருந்த விவசாயிகள் பாதிக்கப்பட்ட னர். அண்மையில் பெய்த கனமழை யால் அணை நிரம்பி ஆற்றில் பெருக்கெ டுத்து வந்த தண்ணீரை கரூர் மாவட் டம் பரமத்தி பகுதியில் உள்ள அணைப் பாளையம் அணையில் தேக்கி வைத்து, அதிலிருந்து பாசன வாய்க்கால்கள் மூலம் மீண்டும் பாசன வசதி பெறும் விவசாயிகள் பலன் பெறவும் திட்டங் கள் மேற்கொள்வதற்காக முதலமைச்ச ரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் இருந்ததால், இம்முறை தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உருவானது. மேலும் இந்நிலையை தொடர்ந்து நடைபெறுவதற்கு இப்பகுதி முழு வதும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் அனைத்து பகுதிகளிலும் தூர்வாரப் பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப் படும். இதன் மூலம் நல்ல தண்ணீர் விவ சாயத்திற்கு பயன் படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். இதன் பயனாக கடந்த 25 ஆண்டுகளாக நீர்வரத்து இல் லாமல் இருந்த நிலை மாறி தற்போது நல்ல தண்ணீர் விவசாயத்திற்கு பயன் படுத்துகின்ற ஒரு சூழல் ஏற்பட்டுள் ளது. தற்போது வந்த தண்ணீரில் 2000 டிடிஎஸ்க்கு குறைவாக உப்பின் அளவு இருந்ததால் தண்ணீர் திறந்து விட லாம் என்ற சூழல் உள்ளது. ஆயினும் முதல்கட்டமாக அந்த தண்ணீரில் உப் பின் அளவு 400 டிடிஎஸ் என்ற அள வில்தான் உள்ளது. இதனால் இப்பகுதி யில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் .விவ சாயிகளின் அனுமதியோடு நீதிமன்றத் தில் ஆணை பெறப்பட்டு தொடர்ந்து தண்ணீர் விடுவதற்கான சூழல் உரு வாக்கப்படும் என்றார் அவர்.