tamilnadu

img

மரணக்குழிகளாக காட்சியளிக்கும் அருமனை பேரூராட்சி சாலைகள் மரம் நட்டு வாலிபர்கள் போராட்டம்

அருமனை, செப்.15- கன்னியாகுமாரி மாவட்டம் அரு மனை முதல் நிலை பேரூராட்சியில் மிக வும் மோசமாக பொதுமக்கள் பயன் படுத்த முடியாத சாலைகளாக மரணக் குழிகளுடன் கடந்த15 ஆண்டுகளாக காட்சியளிக்கிறது. சாலைகளை சீர் செய்யக்கேட்டு பல கட்ட போராட் டங்கள் நடத்தியும் அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் மாறப்பாடி பகுதி இளைஞர்கள் இந்தியா ஜன நாயக வாலிபா் சங்த்தின் தலைமை யில் மாறப்பாடி சந்திப்பில் ஆா்ப்பாட்ட மும் மாறப்பாடி -குழிச்சல் சாலையில் வாழை மற்றும் மரங்கள் நடும் போராட்டமும் நடத்தினர்.  இப்போராட்டத்திற்கு அருமனை வட்டாரக்குழு உறுப்பினர் ஜோஸ் இன்பராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் ரமேஷ், சசி குமார், ஜெயராஜ், சுரேஷ்குமார், ஆமோஸ் ஆகியோர் உரையாற்றினர். வட்டாரச்செயலாளா் ஐய்யப்பன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண் டனர். 10ஆண்டுகளாக பாஜக நிர்வா கத்தில் இருந்துவந்த அருமனை பேரூ ராட்சியில் சாலைகளை சீா் செய்ய எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. மக்களின் குமுறல்களையும் பேராட்டங்களையும் கண்டு கொள்ள வில்லை. தொடர்ந்து உள்ளாட்சி தேர்த லும் நடத்தப்படாத நிலையில் உட னடியாக பேரூராட்சி நிர்வாகம் போர்க் கால அடிப்படையில் மாறப்பாடி-குழிச்சல் சாலையை சீா் செய்யவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

;