tamilnadu

img

திருச்சி மாணவி பாலியல் வன்கொலை: திட்டுவிளையில் எஸ்எப்ஐ  கண்டன ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜூலை 8- திருச்சியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்டதையும், புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி ஜெயப்பிரியா கொலை செய்யப்பட்டதையும் மேலும்  இதுபோன்று கொரோனா காலத்திலும் தொடர்ந்து நிகழும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடு மைகளை கண்டித்தும், அரசு உத்தரவை மீறி கட்டணம் வசூலிக்கும் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் திட்டுவிளை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட குழு உறுப்பினர் முகமது மூஃபீஸ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பிரிஸ்கில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.