நாகர்கோவில், ஆக.3- அரசு ரப்பர் கழக நிர்வாகம் குத்தகை பகுதியாக உள்ள 5000 ஹெக்டேரில் ரகசி யமாக 1001 ஹெக்டேர் பரப்பளவு பகுதியை வனத்துறையில் ஒப்படைப்பு செய்தபின், மீண்டும் 1000 ஹெக்டேர் பகுதியை வனத் துறையில் ஒப்படைப்பு செய்ய முயற்சி நடக்கிறது. இதைக் கண்டித்தும், கோட்ட நிர்வாகம் செய்யும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் திங்களன்று அரசு ரப்பர் கழக மணலோடை கோட்ட அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு கன்வீனர் ஒய்.ஸ்டீபன் தலைமை வகித்தார். கன்னி யாகுமரி மாவட்ட தோட்ட தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் எம். வல்சகுமார் பேசினார். சங்க துணைத்தலைவர் ஏ.வே லப்பன், கோட்ட கமிட்டி உறுப்பினர்கள் பிர தீபன் மகாதேவன், லாரன்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.