நாகர்கோவில், மே.26- சிறுமிகள், பெண்களுக்கு எதி ரான பாலியல் வன்கொடுமை குற்ற வாளி காசி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி குமரி மாவட்டம் முழு வதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 50 மையங்களில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. நாகர்கோவில் கணேசபுரம் பகு தியை சேர்ந்த சுஜி என்ற காசி. இவர் 80க்கும்மேற்பட்ட பெண்கள், பள்ளி மாணவிகளை திட்டமிட்டு ஏமாற்றி, வன்புணர்வு செய்து, அவற்றை பதிவு செய்ததோடு சமூக வலைத்த ளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இது குறித்த பல வழக்குகள் குமரி மாவட்ட காவல்நிலையங்களில் பதிவு செ ய்யப்பட்டுள்ளன. அதனடிப்ப டையில் தற்போது அவர் குண்டர் சட்ட த்தில் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்ளார். காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வர்கள் என்பதால் அவர்களிடம் விசா ரணை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு வசதியாக இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். இந்த குற்ற சம்பவத்தில் காசி மட்டுமின்றி பல முக்கிய புள்ளி கள் ஈடுபட்டுள்ளதால், குற்றத்தில் தொ டர்புடைய அனைவரையும் விசார ணைக்கு உட்படுத்தி குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை மா ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனை த்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. செவ்வாயன்று இக்கோரிக்கை களை வலியுறுத்தி குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவ ட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமை வகித்தார். இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் என்.முரு கேசன், எம்.அகமது உசேன், எம். அண்ணாதுரை, என்.உஷா பாசி, கே. தங்கமோகன் என்.எஸ்.கண்ணன் ஆகியோர் உட்பட மாவட்டக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். வெளிமாநில தொடர்புள்ள பாலி யல் குற்றவாளிக்கு எதிரான இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வலியு றுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர். செல்லசுவாமி மற்றும் 13 பெண்கள் உட்பட 47 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த கோரிக்கையை வலி யுறுத்தி மார்த்தாண்டம், குழித்துறை, தக்கலை, திங்கள் நகர், கருங்கல், அருமனை, ஆற்றூர், திருநந்திக் கரை, மாத்தூர் கோணம், முழுக் கோடு, இரவிப்புதூர்கடை, முட்டைக் காடு, கண்டன் விளை, முளகுமூடு, வில்லுக்குறி, கேசவன் புதூர், புத்தன் சந்தை உட்பட மாவட்டம் முழு வதும் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காசிக்கு உதவும் காவல்துறை
பாலியல் குற்றவாளியான காசிக்கு காவல்துறையிலும் சில முக்கிய புள்ளிகளிடமும் தொடர்பு உள்ளது. அவர்கள் காசியை பாது காக்க முயன்று வருவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், முதலில் 3 நாட்கள் காசியை கஸ்டடி எடுத்த காவல் துறையி னர், 3 நாட்களும் தூங்குவதில் பொ ழுதை கழித்ததாக தெரிவித்தனர். கடுமையான குற்றச்செயல் புரிந்த நபர் மகளிர் காவல்நிலையத்தில் நிம்மதியாக இருந்ததுபோல் மற்ற குற்றவாளிகளுக்கும் வாய்ப்பளி ப்பார்களா என கேள்வி எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்.செல்லசுவாமி பேசுகையில், “மக ளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி காசியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக அவ ரையே விசாரணை அதிகாரியாக நியமித்து வேடிக்கை பார்ப்பது இந்த வழக்கை சீர்குலைக்கும் திட்ட மிட்ட முயற்சியாகும். பெங்க ளூரு, புதுச்சேரி என வெளிமாநி லங்களிலும் காசியின் தொடர்புகள் உள்ளன. காவல்துறையினர் தங்க ளது விசாரணை எல்லையை மகளிர் காவல்நிலையத்துடன் சுருக்கி உள்ளனர். எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட வேண்டும்” என்றார்.