அருமனை, செப். 1- கன்னியாகுமரி மாவட்டம் அரு மனையில் மத்திய மாநில அரசு களின் புதிய ரேசன் திட்டத்தை கை விடக்கேட்டும் அருமனை பேரூ ராட்சிக்கு உட்பட்ட உயிர்பலிவாங்கும் சாலைகளான மாறப்பாடி-குழிச்சல், மானகேரம், மேலத்தெரு சாலை, குஞ்சாலுவிளை- குறூா், கைதகம் சாலை, நெடியசாலை-ஆலறவிளை சாலை, பனங்கரைமூவாத்திக்கேணம் சாலை மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான அருமனை - ஆற்றூா் சாலைகளை போர்க்கால அடிப்படையில் உடனே சீா் செய்யக் கேட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அருமனை பகுதி கிளைகளின் சார்பில் அருமனை கிளை செயலாளா் பி.ஜான் சன் தலைமையில் மாலை நேர தா்ணா போராட்டம் நடை பெற்றது. வட்டாரக்குழு உறுப்பினா் பி. ரமேஷ் துவக்கிவைத்து பேசினார். மாநி லக்குழு உறுப்பினா் ஆா்.லீமாறோஸ், மாவட்டசெயற்குழு உறுப்பினா் என்.எஸ். கண்ணன், வட்டாரச்செயலாளா் ஜெயராஜ் , மாவட்டக்குழு உறுப்பினர் சி.சசிகுமார், பாகோடு கூட்டுறவு சங்க தலைவா் டி.வின்சென்ட் உள் ளிட்டோர் பேசினார்.