tamilnadu

இலவச ஹோமியோ மருத்துவ முகாம்

நாகர்கோவில், ஜூலை 15- குமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை, தலக்குளம் ஊராட்சி பகுதிகளில் இலவச ஹோமியோ மருத்துவ முகாம் நடை பெற்றது. ஒயிட் மெமோரியல் ஹோமி யோபதி மருத்துவக் கல்லூரி சார்பில் சுமார் 4 ஆயிரம் குடும்பங்களுக்கு ஆர்ஸ், ஆல்ப்-30 மாத்திரைகள் வழங்கப்பட்டன. லீலாபாய் உள்ளிட்ட மருத்துவர்கள், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில இணை செயலாளர் உஷா பாசி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் என்.முருகேசன், சிபிஎம் குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் டி.ஜே.புஷ்பதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். மாடத்தட்டு விளையில் சி.அல்போன்சா, தலக்குளத்தில் ஆர்.கோமதி தலைமை வகித்தனர்.