நாகர்கோவில், ஜூன் 2- கோவிட் 19 தொற்று தடுப்பு ஊரடங்கு காலத்திற்கு வீட் டிற்கான மின் உபயோகத்தில் 300 அலகை மானியமாக வழங்க வேண்டும், மின்சார அலகு கணக் கீட்டில் உள்ள குறைபாடுகளை நீக்கிட வேண்டும், விவசாயி களுக்கான இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கிட நட வடிக்கை எடுக்க வேண்டும், மத் திய அரசின் மின்சார கொள்கை அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வடசேரி மின்பகிர்மான மற்றும் மின் விநியோக அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி தலைமை வகித்தார். நகர குழு உறுப்பினர்கள் நாகராஜன், மனோ கர் ஜஸ்டஸ், கவிதா, மாணிக்க வாசகம் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். பார்வதி புரம் மின் வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, மாநகர செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன், மாநகர குழு உறுப்பினர் அஸீஸ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்ட னர். மேலும் வடிவீஸ்வரம், அனந் தன் நகர் மின் வாரிய அலுவல கங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.