நாகர்கோவில், ஆக.22- ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்படும் அரிசி மண்ணெண்ணை அளவு குறைத்து கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் உணவு வினியோக திட்டத்தினை முடக்க மத்திய பாஜக, மாநில அதிமுக அரசுகள் முயற்சித்து வருகின்றன. ஏழை மக்களின் வயிற்றிலடிக்கும் மத்திய மாநில அரசுகளின் இந்த மக்கள் விரோத திட்டத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரேஷன் கடைகளின் முன்பு தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. திருவட்டார் ரேஷன் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, எ.மணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், எ.வி.பெல்லார்மின், எஸ்.ஆர்.சேகர், வட்டார செயலாளர் ஆர்.வில்சன், வட்டாரக்குழு உறுப்பினர்கள் தங்ககுமார், கலா ஆகியோர் பேசினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மாதவன், மோகன், கார்த்திகேயன், ஏசு தாஸ், ஜஸ்டின் ராஜ், விஜயகுமார் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.