திருப்பூர், மே 30 – இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) அமைப்பு உருவாக்கப் பட்டு 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பொன்விழா அமைப்பு தினக் கொடியேற்று விழா நடை பெற்றது. திருப்பூர் மிஷின் வீதி மற்றும் அரிசி கடை வீதிகளில் சிஐடியு சார்பில் செங்கொடி ஏற்றப்பட் டது. இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ் ணன், பனியன் தொழிலாளர் சங்கத் தலைவர் சி.மூர்த்தி உள்பட தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதேபோல் திருப்பூர் அனுப்பர்பா ளைம் பாத்திர சங்க அலுவலம் முன் சிஐடியு மாநிலத் துணைத் தலை வர் எம்.சந்திரன் பங்கேற்று செங் கொடியை ஏற்றி வைத்தார். இதில் மத்திய, மாநில அரசுகளின் தொழி லாளர் விரோத போக்கினைக் கணடித்து எம்.சந்திரன், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் உரையாற்றினர். திருப்பூர், பல்லடம், அவிநாசி, உடு மலை, தாராபுரம், காங்கேயம், ஊத்துக்குளி உள்பட பல்வேறு பகுதிகளிலும் சங்க அலுவல கங்கள் மற்றும் தொழிற்சாலை சங்கக் கிளைகள் முன்பாக செங் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ் உள்பட சிஐடியு மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உள்பட தொழிலாளர்கள் ஆர்வத் துடன் பங்கேற்றனர்.
கோவை
சிஐடியு அமைப்பு தினத்தை யொட்டி கோவை மாவட்டத்தி லுள்ள சிஐடியு சங்க அலுவலகங் கள், ஆலை வாயில்களில் கொடி யேற்றி எழுச்சியுடன் கொண்டா டப்பட்டது. கோவை இருகூர் பாரத் பெட்ரோலியம் அலுவலகம் முன்பு நடைபெற்ற அமைப்புதின நிகழ்வில் சிஐடியு கோவை மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற் றனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வில் சிஐடியு மாவட்ட பொரு ளாளர் ஆர்.வேலுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்ன தாக, இந்நிகழ்வுகளில் மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கு, வேலை நேர அதிகரிப்பை கண்டித்து முழக்கங் கள் எழுப்பப்பட்டது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் கொடி யேற்றி உற்சாகமாக கொண்டா டப்பட்டது. இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதய குமார், மாவட்ட பொருளாளர் வி. இளங்கோ, மாவட்ட துணை செயலாளர் ஏ.கோவிந்தன், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க சேலம் கோட்ட பொதுச்செயலா ளர் கிருஷ்ணமூர்த்தி, துணை பொதுச்செயலாளர் செந்தில், விசைத்தறி தொழிலாளர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் பி.சந்தி ரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் நடை பெற்ற அமைப்பு தின பொன் விழா நிகழ்ச்சியில் மத்திய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கோவன், சிஐடியு மாவட்ட தலைவர் கே.சுந்தரம், மாவட்ட செயலாளர் ஆர்.ரமேஷ், மாவட்ட பொருளாளர் ஏ. நவீன் சந்திரன், மாவட்ட துணைத் தலை வர் ஜெ.ஆல்தொரை, தேயிலை தொழிற்சாலை தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கணேசன், நீலகிரி மாவட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சி ஊழியர் சங்கத் தின் மாவட்ட தலைவர் எல்.சங்கர லிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.