நாகர்கோவில், ஆக. 4- உண்ணாமலைகடை பகுதியை சேர்ந்த வர் ரசல் ராஜ். இவர் மதுரை மேலூரில் உள்ள அரசு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் புத்தன்கடை பகுதியை சேர்ந்த பிஜூ என்பவரது மனைவி கிளாடிஸ் புளோரா பிஎச்டி பட்டம் படிப்பது தொடர்பாக சென்றுள்ளார். ரசல் ராஜ் அவரிடம் ஒருலட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. கிளாடிஸ் புளோரா ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க முடி யாது என கூறியதையடுத்து ரூ.50 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கும் அவர் மறுத்ததால் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டு ள்ளார். இதையடுத்து கிளாடிஸ் புளோராவின் கணவர் லஞ்ச ஒழிப்பு துறை யினருக்கு தகவல் கொடுத்தார். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையில் உள்ள ஒரு கடையில் வைத்து ரூ.25 ஆயி ரம் பேராசிரியரிடம் கொடுத்தனர். அப்போது அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பேராசிரியரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொண்டு சென்று லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி மதியழகன் தலைமை யிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி கைது செய்தனர்.