நாகர்கோவில், மார்ச்.3- அய்யா வைகுண்டரின் 188 வது அவதார தினவிழா கன்னியாகுமரி மாவட்டம் சுவாமி தோப்பு அய்யா வைகுண்டரின் தலைமை பதி யில் புதனன்று விமரிசையாக கொண்டாட ப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சுவாமி தோப்பு தலைமை பதிக்கு பிரம்மாண்ட அவ தார தின ஊர்வலம் புதனன்று காலை நாகர்கோவிலில் உள்ள நாகராஜா திடலில் இருந்து தொடங்கியது. சுவாமிதோப்பு தலைமை பதியின் தலைமை குரு சுவாமி பாலாபிரஜாதிபதி அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் முத்துக்குடை ஏந்திய பெண்க ளும், சிறுவர் சிறுமியரின் கோலாட்ட நிகழ்ச்சி களும் நடைபெற்றது. அய்யா! ஹர ஹர சிவ சிவா என்ற நாமத்தை உச்சரித்தபடி கையில் காவி கொடி ஏந்திய ஏராளமான பக்தர்கள் நடை பயணமாக நாகர்கோவிலில் இருந்து தலைமை பதியான சுவாமி தோப்பு க்கு சென்றனர். இந்த நடைபயணத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளாவில் இருந்தும் பல்லாயிர கணக்கான மக்கள் பங்கேற்றனர். ஆயிரத்திற்கு மேற்ப ட்ட வாகனங்கள் அணிவகுத்து வந்தன. அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடு முறை அறிவிக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் வசதிகாக நாகர்கோவில் உட்பட பல பகுதி களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் சுவாமி தோப்பு தலைமை பதிக்கு இயக்கப்பட்டது.