tamilnadu

img

பொதுத்துறைகள் தனியார்மயத்துக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஆக.18- மத்திய பாஜக அரசு  நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உரு வாக்கப்பட்ட பொதுத்துறை நிறு வனங்களான நிலக்கரி சுரங்கங் கள், ரயில்வே, பாதுகாப்பு துறை  உள்ளிட்ட பொதுதுறை நிறுவ னங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், மத்திய மாநில அரசுகளின் தனியார் மய கொள்கைகளை எதிர்த்தும், பொதுத் துறையை பாதுகாக்க வலியுறுத்தியும் அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் சார்பில்  தேசம் தழுவிய ஆர்ப் பாட்டம் செவ்வாயன்று நடை பெற்றது.  இதையொட்டி, நாகர்கோ வில் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு,  சிஐடியு மாவட்டசெயலா ளர் கே.தங்கமோகனன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநிலகுழு உறுப்பினர் எஸ்.அந் தோணி, எச்எம்எஸ் மாநில தலைவர் எம்.சுப்பிரமணிய பிள்ளை, எல்பிஎப் மாநில துணை செயலாளர் வ.இளங் கோ,  எஐசிசிடியு மாநில துணை செயலாளர் எஸ்.எம்.அந்தோணி முத்து உட்பட அனைத்து சங்க நிர்வாகிகள் உரையாற்றினர்.  அனைத்து தொழிற்சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

;