tamilnadu

img

கனடாவில் கத்தியால் குத்தப்பட்ட தமிழக மாணவி கவலைக்கிடம்

கனடாவில் கத்தியால் குத்தப்பட்ட தமிழக மாணவியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.இச்சம்பவம் மாணவியின் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
நீலகிரி மாவட்டம் குன்னூரைச் பகுதியைச் சேர்ந்த ரேச்சல் ஆல்பர்ட் கனடாவின் டொரான்டோ பகுதியில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் சப்ளை சயின்ஸ் bசெயின் மேனேஜ்மென்ட் படித்து வந்தார். இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ரேச்சலை கத்தி குத்தி விட்டு சிறிது தூரம் இழுத்துச் சென்று வீசி விட்டு தப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ரேச்சல் டொராண்டோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ரேச்சலின் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
கல்வி உதவித் தொகை மூலம் படித்து வந்த ரேச்சல் வரும் மே மாதம் பட்டம் பெற உள்ளார். தனது செலவுகளுக்காக கனடாவிலேயே பகுதி நேரமாக பணிபுரிந்து கொண்டே அவர் படித்து வந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

;