tamilnadu

img

கனடாவில் காட்டுத்தீ - சுமார் 5000 மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு  மாற்றம்

கனடாவில் அல்பெர்டா பகுதியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காட்டுதீ பரவி உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில், வனப்பகுதியில் கடந்த 2 தினங்களாக தீ பற்றி எரிந்து வருகிறது. மளமளவென பரவிய தீ  சுமார் 97,000 ஹெக்டேர் பரப்பளவில் கொளுந்துவிட்டு எரிந்து புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதைத்தொடர்ந்து  ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் 300க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுத்தீ மேலும் பரவ வாய்ப்புள்ளதால், 5000க்கு மேற்பட்ட மக்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.