பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் போதைப்பழக்கத்தை எதிர்த்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநிலக் குழு சார்பில் வடலூர், திருவண்ணாமலை ஆகிய இரு முனைகளில் இருந்து சென்னை நோக்கி திங்களன்று (நவ.25 துவங்கவுள்ள 400 கி.மீ நடைபயணத்தை வெற்றிகரமாக நடத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொளத்தூர் பகுதி குழு சார்பில் பெண்களுக்கு 100 குடை நன்கொடையாக வழங்கப்பட்டது. பகுதி செயலாளர் பா ஹேமாவதி குடைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாதர் சங்க மாநில நிர்வாகிகள் வாலண்டினா, சுகந்தி, மகா,அகிலா, கோட்டீஸ்வரன் நாகலிங்கம், அரவிந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.