tamilnadu

img

நடைபயணம்: மாதர் சங்கத்தினருக்கு பாராட்டு

சிதம்பரம், டிச.12- வன்முறையற்ற,போதையற்ற தமிழகம் கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கம் சார்பில் சென்னை கோட்டையை முற்று கையிட வடலூர் மற்றும் திருவண்ணாமலை யிலிருந்து இரு குழுக்கள் கடந்த 25 ஆம்  தேதி முதல் 4 ஆம்தேதி வரை 400 கிலோ  மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டனர். வடலூரில் இருந்து சென்ற குழுவில் இடம்பெற்ற கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  மாதர் சங்கத்தினருக்கு கடலூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிதம்பரம் கட்சி அலுவலகத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம் தலைமை வகித்தார். மாதர் சங்கத்தின் அகில  இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, கடலூர்  மாவட்டச் செயலாளர் தேன்மொழி, மாநிலக்  குழு உறுப்பினர் மேரி, மாவட்டத் தலைவர் முத்துலட்சுமி, மாவட்டப் பொருளாளர் சிவ காமி உள்ளிட்ட நடைபயணத்தில் கலந்து கொண்டவர்கள் நடைபயணத்தின்போது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்ட னர். இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து நினைவுபரிசு வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின்  மாநிலக் குழு உறுப்பினர்கள் மூசா, மாதவன்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருத வாணன், சுப்புராயன், ரமேஷ்பாபு, அரசு.  சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் வாஞ்சிநாதன், முத்து உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.