சிதம்பரம், ஆக. 5- சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிதம்பரம் கல்வி மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளார். மேலும் பள்ளி யில் தேர்வு எழுதிய 211 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி தர்ஷினி 600க்கு 575 மதிப்பெண்கள் பெற்று சிதம்பரம் கல்வி மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளது. மாணவி தன்யா காயத்ரி 561 மதிப்பெண்களும், கார்த்திகா 553 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 550க்கும் மேல் ஐந்து பேரும், 500க்கும் மேல் 25 பேரும், 450க்கு மேல் 35 பேரும், 400க்கு மேல் 52 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் 8 மாணவர்கள் 98 மதிப்பெண்களும், கணிதம் பாடத்தில் 2 மாணவி கள் 98 மதிப்பெண்களும், பொருளியல் மற்றும் கணக்கு பதிவியல் பாடத்தில் ஒரு மாணவர் 98 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் வீனஸ் குமார், முதல்வர் ரூபியாள்ராணி, துணை முதல்வர் அறிவழகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினர்.