கடலூர், ஜூன் 22- மின்மாற்றி தொடர்ச்சியாக பழுதடைவ தால் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விருத்தாசலம் வட்டம் ஏனாதிமேடு பகுதி யில் 30 விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் மின்மோட்டாரை நம்பி விவ சாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் 250 வோல்ட், 100 வோல்ட் என இரண்டு மின்மாற்றிகள் உள்ளன. இந்த மின்மாற்றிகள் அடிக்கடி பழுதடை வதாக விருத்தாசலம் மின்வாரிய செயற் பொறியாளரிடம் விவசாயிகள் பலமுறை மனு அளித்துள்ளனர். புதிய மின்மாற்றிக்கான முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதுவரை இந்த மின்மாற்றியை பயன்ப டுத்துங்கள் என்று அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். தற்போது மின்மாற்றி மீண்டும் பழுத டைந்துள்ளது. அடிக்கடி மின்மாற்றிகள் பழத டைவதால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. ஏற்கனவே 10 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகியுள்ளது. மின்மாற்றி அடிக்கடி பழதடைவதால் மீத முள்ள நெற்பயிர்களும் கருகும் அபாயம் உள்ளது. எனவே இந்த மின்மாற்றியை உடனடி யாக சரி செய்ய வேண்டும், மின் அழுத்தத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டத் துணை தலைவர் ஜீ.தண்ணி மலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் என்.எஸ்.அசோகன் ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.