நெய்வேலி, ஆக.23- இந்திய அரசின் அறிவி யல் தொழில்நுட்பத் துறை யும் மத்திய அறிவியல் தொழில்நுட்ப தகவல் பரி மாற்றச்குழுவும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்கள் பங்குபெறும் தேசிய குழந்தைகள் அறிவி யல் மாநாடு நடத்தப்படு கிறது. இம்மாநாட்டை 27 வரு டங்களாக தமிழ்நாட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தி தருகிறது. இந்த ஆண்டில் “தூய் மையான, பசுமையான மற்றும் ஆரோக்கியமான தேசத்திற்கான அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்” என்ற கருப் பொருளில் நாடு முழுவதும் மாணவர்கள் ஆய்வுகளை துவக்கியுள்ளனர். இந்த ஆண்டின் டிசம்பர் மாத இறுதியில் நடைபெறும் அகில இந்திய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மிகச் சிறந்த ஆய்வுகள் தெரிவு செய்யப்பட்டு இளநிலை விஞ்ஞானி பட்டம் வழங்கு வார்கள். இதற்கான முதல் நிகழ்ச்சி துளிர் இல்ல துவக்க விழா மற்றும் மாவட்ட அளவிலான வழிகாட்டி ஆசிரியர்கள் பயிற்சி முகாம் நெய்வேலியில் அமைந்துள்ள லிக்னைட் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ் நாடு அறிவியல் இயக்க புர வளரும் என்எல்சி நிதித்துறை முதன்மை பொது மேலாளரு மான எஸ்.மதிவாணன் தலைமை தாங்கினார்.நெய்வேலி செயலாளர் மோகன் வரவேற்றார். என்எல்சி செயல் இயக்கு னர் என். சதீஷ் பாபு இந்த ஆண்டிற்கான 30 துளிர் இல்லங்களை துவக்கி வைத் தார். மாவட்ட துணைத் தலை வர் திருமதி.ராணி தொகுத்து வழங்கினார். என்எல்சி பள்ளிகள் கல்வித்துறை செயலாளர் எஸ்.விநாயக மூர்த்தி, மாவட்டக் கல்வி அதிகாரி ஆர்.ராஜ சுந்தரி,ஓ. பி. ஆர். கல்வி நிறுவனத்தின் தாளா ளர் மாநிலச் செயலாளர் ஸ்டீ பன் நாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ‘கழி விலிருந்து செல்வம்’ என்ற தலைப்பில் மாநில கருத்தா ளர் எஸ்.பாலகுருநாதன், ‘மரபு சார்ந்த அறிவியல் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் மாநில பொதுச் செயலாளர் எஸ். சுப்பிரமணி, ‘துப்புறவு சுகாதார நல் வாழ்வு’ என்ற தலைப்பில் மாவட்ட கருத்தாளர் தெரசா கேத்தரின், மாவட்ட அறி வியல் இயக்க வேலைகள் குறித்து செயலாளர் ஆர். தாமோதரன் பயிற்சி வழங்கி னார். வடலூர் வட்டக் கல்வி அதிகாரி சந்திரலேகா நிறை வுரையாற்றினார்.