tamilnadu

ரயில்வே கடவு விழுந்து வாலிபர் மண்டை உடைந்தது

சிதம்பரம், நவ. 2- கடலூர் மாவட்டம் சிதம்ப ரம் கோவிந்தசாமி தெருவில்  ரயில்வே கேட் உள்ளது. 30க்கும் மேற்பட்ட கிராம  மக்கள் இந்த கேட்டை கடந்து சென்று வரு கிறார்கள். இந்நிலையில் ரயில்வே கேட் அருகே கதிர்வேல் நக ரில் வசிக்கும் மூவேந்தன் (27)  என்பவர் சிதம்பரம் நகருக்கு    செல்வதற்காக ரயில்வே கேடை கடக்கும் போது, இழுவை கம்பி அருந்து கேட்  அவர் தலைமீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த மூவேந்தனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிதம்ப ரம் ராஜா முத்தையா மருத்து வக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து சிதம்பரம் ரயில்வே இருப்புபாதை காவல் துறையினர் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.