சிதம்பரம், ஜூன் 19- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோ யில் ஒன்றியம் திருசென்னபுரம் கிராமத்திலுள்ள நியாயவிலைக் கடையில் ஒவ்வொரு மாதமும் 20 கிலோ அரிசிக்கு 15 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. எண்ணை, பருப்பு, சர்க்கரை வழங்குவதே இல்லை. இத னால் கோபமடைந்த மக்கள் தமிழ்நாடு விவ சாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமையில் காட்டு மன்னார் கோயில் வட்டவழங்கல் அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனையடுத்து வட்டவழங்கல் அதி காரி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சம்பந்தபட்ட கடை விற்பனையார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், இனி அனைத்து பொருட்களும் முறையாக வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்த போராட்டம் கைவிடப்பட்டது.