tamilnadu

img

300 ஆண்டுகளுக்கும் மேலாக மதங்களை கடந்து மகத்துவம்

சிதம்பரம்,மார்.9- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை முழக்குதுறையில் ஆண்டு தோறும் மாசிமகத்திருவிழா வெகுவிமர்சையாக நடை பெறுவது வழக்கம்.   இதில் சிதம்பரம் பகுதியை சுற்றியுள்ள சுவாமி சிலைகள் மற்றும்  வைணவ தலங்களில் முக்கியமான தாக விளங்கும் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலி ருந்து பூவராகவசுவாமி உள்ளிட்ட சாமி சிலை களுக்கு தீர்த்தவாரி நடப்ப தும் வழக்கம். இதில் ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து சாமிகளை வழிபடுவார்கள்.  அதேபோல் இந்த ஆண்டு மாசிமக தீர்த்த வாரிக்காக பூவராகவசாமி கிள்ளை முழக்குதுறைக்கு திங்கள் கிழமை வந்தது. இதனை கிள்ளை தர்கா  டிரஸ்டி சார்பில் அதன் தலை வர் சையத் சக்காப் மற்றும் டிரஸ்டி உறுப்பினர்கள்,  இஸ்லாமியர்கள் மேளதாள, முழங்க பட்டு, பச்சரிசி, தேங்காய்,பழம், ரூ501 சீர் கொடுத்து வரவேற்று பூஜை செய்தனர். இதனை தொடர்ந்து பூவராகசாமி கொண்டு வந்த நாட்டுசக்கரை,மாலை உள்ளிட்ட சீர்வரிசையை இஸ்லாமியர்கள் மற்றும் சாமியுடன் வந்தவர்கள் ஒன்றாக சென்று கிள்ளை  தர்காவில் வைத்து பாத்தியா ஓதினார்கள். வைணவ கடவுளான  பூவராகவசுவாமியை இஸ்லாமியர்கள் வரவேற்று பூஜை செய்து, சுவாமி கொண்டுவந்த சீரை, கோவில் பட்டாச்சாரியார்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மேளதாளம் முழங்க தர்காவிற்கு எடுத்து சென்று பூஜைசெய்து சீராக கொண்டு வந்த  நாட்டு சர்க்கரையை அனை வருக்கும் வழங்கினர். இது மதநல்லிணக்க திற்கான சிறந்த எடுத்துக் காட்டாக   இருந்தது. இந்த நிகழ்வுகளில் இஸ்லா மியர்கள், கோவில் பட்டாட்டாச்சாரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்வு சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.