tamilnadu

img

என்எல்சி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

என்எல்சி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 
கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நெய்வேலி  என்எல்சி இந்தியாவின்   2 வது அனல்மின் நிலையத்தில் கடந்த புதனன்று கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய ஒப்பந்த தொழிலாளர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்த 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி துணை தலைமை பொறியாளர் க.சிவக்குமார் வெள்ளியன்று உயிரிழந்தார். ஞாயிறன்று ஒப்பந்த தொழிலாளி செல்வராஜ் மற்றும் இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று காலை  போர்மேன் வைத்தியநான் உயிரிழந்தார். இதையடுத்து  விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.