கடலூர், ஜுன் 12- கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடந்த 1ஆம் தேதி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 1ஆம் தேதி பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியானார்கள். 17 பேர் தீக்காயத்து டன் சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் படிப்படியாக மருத்துவ மனையில் சிகிச்சை பலனளிக்காமல் மொத்தம் 12 பேர் வரை உயிரிழந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி அனந்த பத்மநாபன் என்ற தொழிலாளி இறந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்.சுரேஷ் என்ற தொழிலாளி சிகிக்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கைை மொத்தம் 14ஆக உயர்ந்துள்ளது.