tamilnadu

img

அரசு உத்தரவை மீறி புதிய சேர்க்கை: மாணவர் சங்கம் புகார்

கடலூர், ஜூன் 24- தமிழக அரசின் உத்தரவை மீறி 11ஆம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை  நடைபெறுவதாக மாவட்ட கல்வி முதன்மை  அலுவலரிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் புகார் அளித்தனர். மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாண வர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறி வித்து, அதற்கான மதிப்பெண் பட்டியல் தயா ரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப்  பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், சில தனியார் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு சேர்க்கை, அதன் தொடர்ச்சி யாக ஆன்லைன் வகுப்புகள், அவற்றிற்கான  கட்டணங்களை கட்ட வேண்டும் என்று பெற் றோரை நிர்ப்பந்தம் செய்து வருகின்றன. இது குறித்து அரசுக்கு புகார் சென்றதால்,  11ஆம் வகுப்பு சேர்க்கை நடத்தும் பள்ளிகள்  மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்றும்  மாணவர்கள் சேர்க்கையை நிறுத்தி வைக்க வும் அறிவுறுத்தியது.

ஆனால், கடலூர் மாவட்டத்தில் அரசின் அறிவிப்பிற்கு எதிராக  தனியார் பள்ளி நிர்வாகங்கள் செயல்படு கின்றன. இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின்  கடலூர் மாவட்டத் தலைவர் குமரவேல், செயலாளர் செம்மலர் உள்ளிட்டோர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு  அளித்தனர். அந்த மனுவில், “கடலூர் நகரில் செயல்  பட்டு வரும் புனித அன்னாள் மேல்நிலைப்  பள்ளி, புனித மேரி மேல் நிலைப்பள்ளி,  கிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் பள்ளி,  சிகே பள்ளி ஆகியவை 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையை இரண்டு நாட்களாக  நடத்துகின்றன. மேலும் இணையதள வகுப்பு களையும் நடத்தி வருகின்றன.  அதற்கான கட்ட ணத்தையும் வசூலிக்கின்றனர். அரசின் உத்தரவுக்கு நேர்மாறாக செயல்படும் இந்த  பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.